பன்மயத்தை ஆதரியுங்கள்!


குறைந்த நிலத்தில் அதிக விளைச்சல் ஈட்டும் விவசாயிகளுக்கு, ஊக்க பரிசுதொகை அளிப்பதாக முதல்வர் அறிவித்துள்ளது வரவேற்க்கதக்கதே. ஆனால், இப்படி அளிக்கும் ஊக்கதொகை வெறும் நெற்பயிருக்கு மட்டுமல்லாமல், ஒரு காணி நிலத்தில், பல வித பயிர்செய்து அதன்மூலம் தங்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் தற்சார்பு ஈட்டும் விவசாயிகளுக்கும் அளித்தால், அதன்மூலம் பன்மையம் பாதுகாக்கப்படும், விவசாயிகளும் பயனடைவர். (இந்த கொள்கையை முன்னிறுத்தி, உழவன் பால எழுதும் "கெடுமுன் கிராமம் சேர்" கட்டுரைகளை,  www.kaani.org வலைதளத்தில் காண்க).

நாம், வெறும் விளைச்சல் = உற்பத்தி திறன் என்கின்ற, பின்னோக்கிய industrial revolution சிந்தனையிலிருந்து விடுபட்டு, net nutritional output மற்றும் nutrition security போன்ற முற்போக்கு சிந்தனய்களை கொண்டு நமது வேளாண்மையை அணுகுவது மிகவும் அவசியம். வெறும் சக்கையாக, அதிக அளவில் உற்பத்தி செய்து நெல்லு சோறு சாப்பிட முடியாமல் அவஸ்தை படும் எந்நாட்டு diabetes மக்களுக்கு அளித்து என்ன பயன்? பெருகிவரும் உடல் உபாதைகள் அனைத்தும், நமது வாழ்க்கை முறை மற்றும் அதிவேகமாக மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களினால்தான் என்றான பின்னர், இத்தகைய புதிதாக ஏற்படுத்தக்கூடிய விருதுகள், பழைய mono-culture சிந்தனைகளிலிருந்து விடுபட்டால், விவசாயிகளை ஒரு நல்வழியில் ஊக்கபடுத்தியதாகும்.

-------------------------------------------------

அதிக விளைச்சல் காட்டும் விவசாயிக்கு ரூ.5 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா




சென்னை, டிச. 21: அதிக விளைச்சல் காட்டும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 நவீன தொழில்நுட்பத்துடன் அமல்படுத்தப்படும் பல்வேறு சாகுபடி முறைகளில் திருந்திய நெல் சாகுபடி முறையே, உணவு உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய சிறந்த முறையாகும். இந்த முறைக்கு அதிக ஊக்கம் அளிக்கும் வகையில் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தினைக் கடைப்பிடித்து மாநிலத்திலேயே அதிக விளைச்சலைப் பெறும் விவசாயிக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்புப் பரிசு வழங்கப்படும்.
 அதன்படி, பரிசுத் தொகையாக ரூ.5 லட்சமும், ரூ.3,599 மதிப்புடைய பதக்கமும் வழங்கப்படும். குடியரசு தினத்தன்று முதல்வர் ஜெயலலிதாவால் இந்தப் பரிசும், பதக்கமும் அளிக்கப்படும்.
 இந்தப் போட்டியில் பங்குபெறும் விவசாயி, குறைந்தபட்சம் 50 சென்ட் நிலத்தில் பயிர் செய்திருக்க வேண்டும. ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்ச விளைச்சல் 2 ஆயிரத்து 500 கிலோ இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்தப் போட்டி நடத்தப்படும். இந்தப் போட்டி சென்னை, நீலகிரி தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும்.
 முதல்வர் ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையால் விவசாயிகளிடையே வேளாண்மையில் புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்துவதில் அதிக ஆர்வமும், போட்டியும் ஏற்படும். இதன் மூலம் குறைந்த நிலத்தில் அதிக அளவு உற்பத்தி பெருக வழிவகை ஏற்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Anonymous said…
Excellent post,I bookmark your blog to my browser bye. By RegardsOvernight Prints with Brochure Printing

Popular Posts