Photo on TN Places

Wednesday, December 21, 2011

பன்மயத்தை ஆதரியுங்கள்!


குறைந்த நிலத்தில் அதிக விளைச்சல் ஈட்டும் விவசாயிகளுக்கு, ஊக்க பரிசுதொகை அளிப்பதாக முதல்வர் அறிவித்துள்ளது வரவேற்க்கதக்கதே. ஆனால், இப்படி அளிக்கும் ஊக்கதொகை வெறும் நெற்பயிருக்கு மட்டுமல்லாமல், ஒரு காணி நிலத்தில், பல வித பயிர்செய்து அதன்மூலம் தங்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் தற்சார்பு ஈட்டும் விவசாயிகளுக்கும் அளித்தால், அதன்மூலம் பன்மையம் பாதுகாக்கப்படும், விவசாயிகளும் பயனடைவர். (இந்த கொள்கையை முன்னிறுத்தி, உழவன் பால எழுதும் "கெடுமுன் கிராமம் சேர்" கட்டுரைகளை,  www.kaani.org வலைதளத்தில் காண்க).

நாம், வெறும் விளைச்சல் = உற்பத்தி திறன் என்கின்ற, பின்னோக்கிய industrial revolution சிந்தனையிலிருந்து விடுபட்டு, net nutritional output மற்றும் nutrition security போன்ற முற்போக்கு சிந்தனய்களை கொண்டு நமது வேளாண்மையை அணுகுவது மிகவும் அவசியம். வெறும் சக்கையாக, அதிக அளவில் உற்பத்தி செய்து நெல்லு சோறு சாப்பிட முடியாமல் அவஸ்தை படும் எந்நாட்டு diabetes மக்களுக்கு அளித்து என்ன பயன்? பெருகிவரும் உடல் உபாதைகள் அனைத்தும், நமது வாழ்க்கை முறை மற்றும் அதிவேகமாக மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களினால்தான் என்றான பின்னர், இத்தகைய புதிதாக ஏற்படுத்தக்கூடிய விருதுகள், பழைய mono-culture சிந்தனைகளிலிருந்து விடுபட்டால், விவசாயிகளை ஒரு நல்வழியில் ஊக்கபடுத்தியதாகும்.

-------------------------------------------------

அதிக விளைச்சல் காட்டும் விவசாயிக்கு ரூ.5 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா




சென்னை, டிச. 21: அதிக விளைச்சல் காட்டும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 நவீன தொழில்நுட்பத்துடன் அமல்படுத்தப்படும் பல்வேறு சாகுபடி முறைகளில் திருந்திய நெல் சாகுபடி முறையே, உணவு உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய சிறந்த முறையாகும். இந்த முறைக்கு அதிக ஊக்கம் அளிக்கும் வகையில் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தினைக் கடைப்பிடித்து மாநிலத்திலேயே அதிக விளைச்சலைப் பெறும் விவசாயிக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்புப் பரிசு வழங்கப்படும்.
 அதன்படி, பரிசுத் தொகையாக ரூ.5 லட்சமும், ரூ.3,599 மதிப்புடைய பதக்கமும் வழங்கப்படும். குடியரசு தினத்தன்று முதல்வர் ஜெயலலிதாவால் இந்தப் பரிசும், பதக்கமும் அளிக்கப்படும்.
 இந்தப் போட்டியில் பங்குபெறும் விவசாயி, குறைந்தபட்சம் 50 சென்ட் நிலத்தில் பயிர் செய்திருக்க வேண்டும. ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்ச விளைச்சல் 2 ஆயிரத்து 500 கிலோ இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்தப் போட்டி நடத்தப்படும். இந்தப் போட்டி சென்னை, நீலகிரி தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும்.
 முதல்வர் ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையால் விவசாயிகளிடையே வேளாண்மையில் புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்துவதில் அதிக ஆர்வமும், போட்டியும் ஏற்படும். இதன் மூலம் குறைந்த நிலத்தில் அதிக அளவு உற்பத்தி பெருக வழிவகை ஏற்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, November 03, 2011

நூலகமா அல்லது குழந்தைகள் மருத்துவமனையா?

தமிழகத்தில் குழந்தைகள் நலனுக்காக  ஒரு மாபெரும்  மருத்துவமனை  ஈற்பட  இருப்பதை  ஒரு போதும்  எதிர்க்க  முடியாது. 

ஆனால், அப்படிப்பட்ட  முயற்சி  எந்த  காரணத்தால்  எடுக்கபடுகின்றது  என்று ஆராய்வது  முக்கியமாகின்றது. 

இன்றைய தமிழகத்தில் குழந்தைகள் நல பொது மருத்துவமனைகளின் நிலை தான் என்ன? இவற்றின் பிரச்சனைகள் என்ன? என்று ஆராய்ந்து, அதன் பின்னே புதிய ஒரு மருத்துவமனைக்கான முயற்சி மேற்கொண்டால், நிச்சியமாக வரவேற்கலாம்.

சமீபத்தில், ஒரு தன்னார்வு தொண்டு நிறுவத்தின் உதவியால், தமிழகத்தில் உள்ள நான்கு குழந்தை நலனிற்கான பொது மருத்துவமனைகள் எவ்வாறு இயங்குகின்றன என்று ஆய்வு நடத்தப்பட்டது.

இவற்றில் நாம் கவனிக்க வேண்டிய சில முக்கிய கண்டுபிடிப்புகள் சிலவற்றை கீழே காண்போம்.
1  குழந்தை நல பொது, இலவச மருதுவமநிகளுக்கு வருபவர்கள் பெரும்பாலும் வேறு எங்கும் செல்லாத நிலையில் தான் வருகின்றனர். (படம் - 1 : எழுபது முதல் தொநூறு சதவிகிதம் பேர், 'இதை தவிர வேறு வழி இல்லை' என்ற நிலையிலேயே அரசு பொது மருத்துவமனைகளுக்கு வருகின்றனர்). நகரப்புறங்களில் இது சிறிது குறைவென்றாலும், சென்னை மாநகரத்தில் உள்ள ICH போன்ற அரசு பொது குழந்தை மருத்துவமனைக்கு வரும் பெருபாலானவர்கள், வேறு எங்கும் செல்ல வசதி இல்லாமல் தான் இங்கு வருகின்றனர். வசதி வாய்ப்பு இல்லாததின் காரணத்தில் மாத்திரமே மக்கள் பொது மருத்துவமனைகளுக்கு, தாய் செய் நலம் விரும்பி வருகின்றார்கள்.  இந்து மருத்துவமனைகளில் உள்ள வசதிகளினாலோ அல்லது அது எங்கு அமைந்துள்ளது என்கின்ற காரணத்தினாலோ அல்ல.

2 ஊழல் - அப்படி வருகின்றவர்களில் பெரும்பாலானவர்கள், தாங்கள் மருதுவமைகளில் லஞ்சம் கொடுத்தே சிகிச்சை பெற முடிந்தது என்று தெரிவிக்கின்றனர். (படம் - 2 : இந்த ஆய்வில், தங்கள் சிகிச்சை குறித்து கருது தெரிவித்த தாய்மார்களில், சராசரியாக ஐம்பது விழுக்காடுக்கு மேற்பட்டவர்கள் லஞ்சம் கொடுக்காமல் சிகிச்சை தொடங்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். மற்றும் பதினைது முதல் நாற்பத்திரண்டு விழுக்காடு பேர், தாங்கள் பெருமளவில் ஆவணங்களை புர்திசெய்த பிறகே சிகிச்சை பெற முடிந்து என்று தெரிவித்துள்ளனர்). "ஊழல் இல்லாத பொது மருதுவமைகளே தமிழகத்தில் இல்லை என்று கூறலாம்", என்கின்ற வகையில் பலரும் கொண்டுள்ள கருத்தை இந்த ஆய்வும் உர்ஜிதபடுதுகின்றது. ஊழலற்ற குழந்தைகள் நல மருத்துவமனை, மக்களுக்கு மிக அவசியம்.

3  வசதிகள் -  சரி இப்படி வருபவர்களுக்கு வசதிகள் எவ்வாறு உள்ளன? என்று பார்த்தால், பெரும்பான்மையான குழந்தைகள் அரசு பொது மருத்துவமனைகளில் குறைந்த அளவு கூட வசதிகள் இல்லை என்பதே உண்மை. (படம் - 3 : மருத்துவமனையின் சுத தமான சுழல், குடி தண்ணீர், கழிப்பறையின் சுத்தம், போன்றவற்றை மதிப்பெண் இட்டால், இவற்றை உபயோகிப்பவர்கள் யாருமே, இந்த குறைந்த பட்ச வசதிகள் உபயிக்கும் தருவாயில் இல்லை என்றே தெரிவிப்பதை அறிகின்றோம்). குறைந்த பட்ச வசதிகள் கூட ஒரு பெண்ணிற்கு தற்போது உள்ள குழந்தைகள் பொது மருதுவமைகளில் கிடைக்காத் நிலையில், இன்னொமொரு மருத்துவமனை எந்த அளவில் உதவியாக இருக்கும் என்று தெரியவில்லை, அதற்க்கான அவசியமும் புரியவில்லை. 

இவை பொதுவான வசதிகள் என்றால், மருத்துவ வசதிகள் இல்லாத அவல நிலைய இன்னொரு புறம்.  தமிழகத்தில் ஒரு முக்கியமான (சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள) அரசு பொது மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல துறையில், incubator என்கின்ற ஒரு சாதனத்தை இயக்குவதற்காக இயாலமயினால் நாளுக்கு சில குழந்தைகளை இழந்த நிலையம் உள்ளது. இந்த சாதனம், முன்கூட்டியே பிறந்த பல குழந்தைகளுக்கு உயிர் பிழைப்பதற்கான சாதனமாக விளங்குகின்றது. ஆனால், இதை இயக்குவதற்கு மின்சாரம் அவசியம். தமிழக மின்தடையின் காரணத்தால், சென்ற வருடம், குழந்தைகள் மருத்துவமனையில் back-up generator இல்லாததினால், ஒரு incubator கீழ வைக்கப்பட்ட குழந்தைகள் ஒவ்வரு மின்தடையின் போதும் மரணத்தை தழுவவேண்டியதானது. இவ்வளவிற்கும், இதற்கான செலவேன்னவோ மிகவும் குறைச்சல் தான். இன்னொமொரு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை கழுவுவதிர்க்கு பாதுகாப்பான தண்ணீர் வசதி இல்லை, சமீபத்தில் (சென்ற வாரத்தில்) இன்னுமொரு பொது குழந்தைகள் மருத்துவமனையில், இருபதிற்கும் மேற்பட்ட குழந்தைகள், மூச்சுவிடுவதற்கு கஷ்டப்படும் போது உதவும் சாதனம் இல்லாததினால் இறந்துபோனது எந்த பத்திரிகையிலும் வரவில்லை, நம்மில் பலருக்கு தெரியவில்லை என்பதே உண்மை. சில மாதங்களுக்கு முன்னர், நான் சென்ற ஒரு அரசு பொது மருத்துவமனையில், குழந்தைகள் சிகிச்ச பிரிவில், புதிதாக பல சாதனங்கள் வந்திரங்கியும், அவற்றை supply செய்த தனியார் நிறுவனம், install செய்யவில்லை என்ற காரணத்தால், உபயோகிக்காமல் இருதது. கொடுமை என்வென்றால், இவை அனைத்தும் அவசரமான நேரத்திலும், அத்யாவச்யமான விதத்திலும் இருந்து எப்போது வேலைசெய்ய வேண்டிய சாதனங்கள் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

தமிழகத்தில், கர்பிணி பெண்களின் உடலில் தேவையான உட்டச்சதுக்கள் இல்லை என்று அரசு புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன. அரசால், anemia வை எதிர்த்து வழங்கப்படும் iron tablet விநியோகம் மற்றும் உட்கொள்ளுதல் குறைந்து கொண்டிருக்கின்றது, ஆனால் anemia வின் விகிதம் அதிகரிதுகொண்டிருக்கின்றது. IMR மற்றும் MMR என்று கூறப்படும், சிசு மற்றும் பிறப்பு சமயத்தின் தாய் மரணம் விகிதம், அகில இந்தியாவைவிட குறைந்து இருந்தாலும், அதிகமாகவே உள்ளது. பாரம்பரிய விதத்தில் மக்களிடம் இருந்துவந்த உட்டச்சது மிகுந்த உணவ வகைகளின் உட்கொள்ளுதல் குறைந்து, சத்தில்லா, நஞ்சு நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளுதல்லும் இதற்க்கு ஒரு காரணம். இவற்றை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் கடமை உள்ள குழந்தை நல மருத்துவமனைகளில்  பலவற்றில் , சரியான  விதத்தில்  பெண்களுக்கு  சரியான  ஆலோசனைகள்  வழங்கபடுவதில்லை  என்பது  உண்மை . இவற்றிற்கு , சரியான  ஆள்பலம் , அவர்களுக்கு  முடிவெடுக்கும்  உரிமை  மற்றும்   சுதந்திரம் , சரியான  சாதனங்கள்  மற்றும்  பயிற்ச்சிகள்  கொடுக்கப்படவில்லை  என்பதும்  உண்மையே . 

தெரிந்தோ, தெரியாமலோ, சென்ற ஆட்சி காலத்திலும் சில நல்ல விஷயங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று சொல்வதில் எவரும் குறைந்துவிட மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. பிரச்சனையை என்னவென்றால், தான் செய்த சின்ன சின்ன முயற்ச்சிகளை கூட, பெரிதுபடுத்தி, "தமிழர் உணர்வு", "தமிழர் மரபு", "தமிழர் பண்பாடு", என்று தத்து பித்தென்று தற்புகழ்ச்சி கொள்ளுதல்.  இதற்க்கு மக்கள் மயங்க மாட்டார்கள் என்பதிற்கு சான்றாக தான், அவரை மக்கள் பதவி இறக்கினார்கள். குழந்தைகள் உடல்நலம் காக்கவும், நல்ல மருத்துவ வசதி அளிக்கவும், இருக்கும் சூழலில், பல குறைபாடுகளை நிவர்திசெய்வதே அன்றி, மென்மேலும் மருத்துவமனைகள் பெரும் செலவில் ஏற்படுதவதன்று.

சென்னையில் உள்ள பொது நூலகங்களில் பலவற்றை உபோயோகிதுள்ள அனுபவத்தில், ஒரு நல்ல நூலகத்திற்கான தேவையை என்னால் உணர முடியும். கன்னிமாரா நூலகம், பழமையானது, பல பொக்கிஷங்கள் இருந்தும், நான் சென்ற காலங்களில், பெரும்பாலோர் செய்தித்தாள் படிப்பதிர்க்கோ அல்லது வெய்யில் தப்பி தூங்குவதிர்க்கோ மாத்திரமே சென்று கொண்டிருந்தனர். அதை சுற்றியிருந்த சூழலில் காதலர்களுக்கு, ஒரு நல்ல சந்திப்பாக விளங்கியது. ஆனால், நூலகத்தில் பழைய புத்தகங்களை வைப்பதிர்க்கும், பராமரிப்பதிர்க்கும் மிக குறைந்த விதத்திலேயே முயற்ச்சிகள் எடுக்கபட்டதேன்னவோ உண்மை. மற்றொரு முக்கியமான நூலகமான அண்ணா சாலையில் உள்ள பாவேந்தர் நூலகத்தில் நிலைமை இன்னமும் மோசம். இங்கு, என்னை போல பலரும், தாங்கள் தொடர்ந்து படிக்கும் புதகங்களுக்கேன்றே தனியாக சில புத்தக அடுக்குகளை 'தனியார் மயமாக்கிகொண்டது' உண்மை. நான் இந்த இரு நூலகங்களுக்கும் சென்று பல   வருடங்கள் ஆகிவிட்டன என்பது உண்மை. சமீப காலங்களில், கன்னிமாரா நூலகம் நன்றாக இயங்குவாதாக சிலர் தெரிவித்தனர். நான் இதுவரை, இந்த புதிய நூலகத்திற்கு சென்றதில்லை. 

தமிழகத்தில், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் படிக்கும் பழக்கம் குறைந்து வருகின்றது. மேல் கல்வியில், வெறும் தொழில்நுட்ப படிப்பிற்கு முக்கியத்துவம் தந்து, மற்ற துறைகளை தாழ்ந்ததாக தொடர்ந்து நிலவி வரும் ஒரு பொதுவான போக்கே இதற்க்கு காரணம் என்று எனக்கு தோன்றுகிறது. தொழில்நுட்ப படிப்பில், தமிழிலோ, அல்லது, நூல்கள் மூலமாகவோ, கல்லூரிக்கு வெளியே வேறு ஏதேனும் வாசிக்க வேண்டும் என்கின்ற தேவை இல்லை. பெற்றோர்களும், ஆசிரியர்களும் இவர்களை ஊக்குவிப்பதுமில்லை என்றே தோன்றுகிறது. இணையதளத்தின் ஆக்கிரமிப்பும், தொழில்நுட்ப படிப்போர் மததியில் அதிகமிருப்பது ஒரு காரணமாகவும் இருக்கலாம். ஒருமுறை முதுநிலை பட்டபடிப்பு முடித்த சில இளைஞர்களுடன் பேசும்போது, தாங்கள் தமிழில் எந்த ஒரு நூலையும் பள்ளி நாட்களுக்கு பின் வாசித்ததில்லை என்றே தெரிய வந்தது. பெரும்பாலானவர்களுக்கு, சினிமாவின் மூலவாகவும், தொலைகாட்சியின் மூலமாக குறைந்துவரும் தமிழ் சொற்கள்தான், மொழிஎன்றே தெரிகின்றது. சாலமன் பாப்பையாவும், நடிகர் வடிவேலுவும் தான் இன்றைய தமிழின் முக்கிய பாதுகாவலர்களாக திகழ்கின்றனர்.

இந்த சூழலி, ஒரு நல்ல நூலகம் உருவாதேன்பது, ஒரு சாதனை என்றே எண்ண தோன்றுகிறது. நிச்சியமாக மக்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு, மீண்டும் நூல்களை வாசிக்க வேண்டும் என்கின்ற உந்துதலை ஏற்படுத்துவதற்கு அத்தகைய நூலகம் உதவும் என்று எனக்கு தோன்றுகிறது. ஏற்படுத்திய அத்தகைய நூலகத்தை தேவையில்லா குழந்தை மருத்துவமனையாக மாற்றுதல் என்பது, அரசியல் முடிவே அன்றி அறிவார்த முடிவாக தெரியவில்லை. புதிய முதல்வர் சில நல்ல முயற்சிகளை ஏற்படுதியிள்ளது பாராட்ட தக்கது, மரபணு மாற்றிய விதைகளை அரசு ஊக்குவிக்காது என்கின்ற அறிக்கை, கூடங்குளம் விஷயத்தில் அரசின் நிலை, மீனவர்களின் விஷயத்தில் அரசு காட்டியுள்ள அவசரம் மற்றும் மத்திய அரசிடம் நேருக்கு நேராக பேசும் தோரணை யாவையும் வரவேற்க தக்க விஷயங்கள். முந்திய ஆட்சியில் நடந்த சில நல்ல விஷயனகளை (நூலகம், தொல்காப்பிய பூங்கா போன்ற முயற்ச்சிகள்) தொடர்ந்து ஆமோதிப்பது இந்த அரசிற்கு எந்த விதத்திலும் குறையாகாது என்பதை, முதல்வரும் மற்ற மந்திரிகளும் உணரவேண்டும். 

Wednesday, November 02, 2011

தமிழில் காந்தியை அறிதல்...

தமிழில் காந்தியை அறிதல்...

சென்னையில் யாரேனும் காந்தியை பற்றி தெரிந்து கொள்ள  வேண்டுமன்றால், முதலில் அவர்கள் செல்லும் இடம், தக்கர் பாபாவாக வளாகமாகதான் இருக்கும். திரு. அண்ணாமலை மற்றும் அவர் மனைவி, பிரேமா அண்ணாமலை நீண்ட நாட்களாகவே பல இளைஞ்யர்களை வழிநடத்தி வருகின்றனர்.

இப்போது, திரு. அண்ணாமலை அவர்களின் பல சொற்பொழிவுகள் யூ டிபு மூலமாக அனைவருக்கும் கிடைப்பது மகிழ்ச்சி தருகிறது. 

http://youtu.be/qZCcm9PIc7k
http://www.youtube.com/watch?v=0rkz2PqeH5I
http://www.youtube.com/watch?v=kAbmwM0RC6U
http://www.youtube.com/watch?v=dzz1iRuyDps
http://www.youtube.com/watch?v=YY8pN_S9Cuo
http://www.youtube.com/watch?v=hRALp-ya_bM
http://www.youtube.com/watch?v=vqs-USh9vjk
http://www.youtube.com/watch?v=_LusUSWLrgc
http://www.youtube.com/watch?v=Eg0aWKs9nJQ
http://www.youtube.com/watch?v=Dx7OV9xveEk
http://www.youtube.com/watch?v=UMo19yhPMR8
http://www.youtube.com/watch?v=NgWwqoTtA1M

Friday, October 28, 2011

தமிழகம் No. 1

தமிழகம் No. 1 

இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழகம் அமையும், என்று நம் புதிய முதல்வர் சமீபத்தில் தெரிவித்தாலோ என்னவோ, நாட்டின் தற்கொலை புள்ளிவிவர கணக்கில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது!!

நாளொன்றுக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட விவசாயியும், பதினான்கு வயதிற்கு உட்பட்ட மாணவனும் தற்கொலை செய்துகொள்கின்றனர். 

இதை தவிர  சாலை விபத்துகளிலும், இந்தியாவில் அதிக அளவில் விபத்துக்கள் நிகழும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது. 

பேருந்து மற்றும் கார் விபத்து  தமிழகத்திலேயே மிக அதிக அளவில் ஏற்படுகின்றன.

இதெல்லாம் சென்ற வருடத்தின் அகில இந்திய கணக்கெடுப்பில் தெரியவந்தவை. சரி, இவ்வளுவு பேர் நம்மை சுற்றி செதுக்கொண்டிருக்கும்போது, மரதமிழர்களாகிய நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்? 

செம்மொழி கொண்டாட்டம்

இடைவிடாத டு. ஜி. வசை 

காலையில் இலங்கைக்கு எதிராக போர்க்குரல், மாலையில் டாஸ்மாக்கில் தஞ்சம்

இந்தியாவில் அதிகமாக வாகனங்களை வாங்கினோம், விற்றோம்

நமது இயலாமைக்கேல்லாம் டில்லியை வசைபடினோம் 

வாழ்க தமிழகம்! வளர்க தமிழனின் வான் நோக்கும் புகழ்!  

Invitation from Upasana, Auroville...do join this event!

Friday, July 08, 2011

தமிழக விவசாயம் எதிர்காலம் 1 - பாருக்குள்ளே நல்லநாடா அல்லது, பழையது பேசி பின்னிலை நாடா?



இயற்க்கை விவசாய யுக்திகள் தான் உலகத்தில் நிலைத்த நீடித்த பொருளாதரத்திற்கு உகந்தது என்று, UNCTAD அறிக்கை சமீபத்தில் வெளியானது தெரிவித்தது. ஐ.நா. வின் ஒரு நிறுவனம், இத்தகைய ஒரு அறிக்கையை வெளியிடுவது இதுவே முதல் முறையாக இருக்கும். அதுவும், வளர்ச்சி மற்றும் வணிகத்தை முன்னிறுத்தி உள்ள ஒரு ஐ. நா. நிறுவனம் இத்தகைய கருத்தை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், அத்தகைய அனைத்து நிரிவனங்கலுமே, மேற்கத்திய பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் எந்த ஒரு கருத்தையும் அவ்வளவு சுலபமாக வெளியிடாது என்கிற கருத்து அனைவரும் அறிந்ததே. இந்த அறிக்கை மற்றும் இதனுடன் கூடிய ஆய்வு, மேற்கத்திய நாடுகளின் மிகப்பெரிய மனமாற்றத்தை குறிக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சமீபத்தில், CODEX என்னும் பன்னாட்டு உணவு பாதுகாப்பிற்க்கான கூட்டு நிறுவனத்தில், நீண்டநாளாக ஒப்புக்கொள்ளபடாத ஒரு சட்ட மாற்றம், ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது. இதையும் நாம் அறிவது முக்கியம். மரபீனி மாற்று விதிகளை கொண்டு உற்பத்தி ஆகும் பொருட்களை, "எவை மரபீனி மாற்றம் பொருட்களை கொண்டு தயார் செய்தோம்", என்று சிகரெட் பெட்டியில் உள்ளதைபோலே ஒரு எச்சரிக்கை இருக்கவேண்டும், என்று பல நாடுகள் கோரியும், அமேரிக்கா இதுவரை அத்தகைய எச்சரிக்கை எந்த உதவியும் செய்யாது என்று கூறி, அத்தகைய முயற்ச்சியை எதிர்த்து வந்தது. இப்போது, அந்த நாடே முன்வந்து அத்தகைய எச்சரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. ஐரோப்பா நாடுகளில், பெரும்பாலவற்றில், மரபீனி மற்று விதிகளை கொண்டு தயாராகும் உணவு பொருட்களை தடை செய்துள்ளது, மக்கள் அவற்றை பயன் படுத்த எதிர்ப்பது நீண்ட நாட்களாக நடந்துவரும் ஒரு நிகழ்வு. 
"வளர்த்த நாடுகள்" என்று கூறப்படும் நாடுகளின் நிலை இவ்வாறு மாறுகின்ற நிலை ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம், பொலிவியா போன்ற "வளரும் நாடுகள்" சுற்றுப்புற சூழலுக்காக மாற்றிவரும் தேசிய அளவிலான திட்டங்கள் பெருமையாகவும், வியக்கும் விததில்லும் உள்ளது. என்ன செய்துளார்கள் அப்படி இந்த பொலிவியா மக்கள்? மரங்களுக்கு, வனங்களுக்கும், நீர்நிலை போன்ற ஆதாரங்களுக்கும், மனித உயிருக்கு சமமான உரிமையளிதுள்ளது. இதனால், மனிதனுக்கு எந்த விதத்தில் அடிப்படை உரிமைகளை பறிக்க முடியாது என்று நினைக்கின்றோமோ, அதே அளவிற்கு, "தாய் மண்ணின்" உரிமையையும் மனித பேராசைக்காக பறிக்க கூடாது என்று இந்த நாடு சட்டம் இயற்றியுள்ளது.  
இயற்கையை அழித்து ஆக்கம் செய்வோம் என்கிற குறுகிய சிந்தனையிலிருந்து, உலகம் விடுபட்டு, இயற்கையுடன் இனிது ஆக்கம் என்கின்ற தொலைநூகுடன் செயல்பட துவங்கும் காலமாகவே சமீபத்தில் நடந்துள்ள பல முயற்ச்சிகளும் எண்ண தோன்றுகின்றன. 

"ஒரு நிதீஷை போலே", என்று மிகவும் பின்தங்கிய மாநிலமான பீகாரை, ஐந்தே வருடங்களில் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திய நிதிஷ் குமார், சமீபத்தில், தேசிய விதை சட்டத்தை, பன்னாட்டு விதை மற்றும், விளைபொருள் விற்கும் நிறுவனங்களுக்கு துணை போகும்  சட்டங்களை பெருமளவு சாடியும், அதற்க்கு மாற்றாக, நமது விவசாயிகள் மத்தியில் இயற்க்கை விவசாய யுக்திகளை பரப்பும், ஒரு புதிய பசுமை புரட்ச்சியை முன்வைத்து உள்ளார். அவர் மாநிலத்தில் மற்றுமல்லாமல், இதர கிழக்கு மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களுக்கும் அத்தகைய கொள்கைகளை குறித்து எழுதியும் பேசியும் வருகிறார்.

இந்த காலகட்டத்தில், தமிழக விவசாயத்தின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாக உள்ளது...தொடரும்...

Friday, June 10, 2011

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?


நீங்கள் ஏன் தோற்றீர்கள்? என்ற கேள்விக்கு, 'சில பர்ப்பநியர்களினால்' என்று பதிலளித்து, தனது ஐம்பது ஆண்டு அரைத்து புளித்த மாவை மீண்டும் அறைக்க முயன்றுள்ளார் கலைஞர். இவருடைய புளித்து போன இந்த வார்த்தைகளை இவருக்கு சேவகம் செய்த காக்காய் கூட்டம் கூட நம்பத்தயாராக இல்லை. 

 பெரியவருக்கு நிருபர்களை கண்டாலே பற்றிக்கொண்டு வருகிறது இப்போதேல்லாம். ஆனால் பழக்க தோஷத்தால், அவர்களை பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை. பெரும்பாலான கேள்விகளுக்கு சமீப காலமாக, கேள்வி வார்த்தைகளை திரித்தும், நிருபர்களை ஏசியும், மறு கேள்வி கேட்டும் விடை அளிக்கிறார். சுற்றியுள்ளவர்கள், கட்சியின் நலனை கருதி, இவரை இனிமேலும் பொது இடங்களில் அனுமதிக்காமல் பாதுகாப்பது கட்சியின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானது, இன்றியமையாதது. செய்யும் தைரியம் கழகத்தில் யாருக்கேனும் இருக்குமா?
Google Groups Subscribe to Chief-Syndicate To Get Updates from this Blog by email
Email:
Browse Archives at groups.google.com